Sunday, July 24, 2011

சீனாவில் கோர ரயில் விபத்து - Video, படங்கள் இணைப்பு

சீனாவின் ஷிஜியாங் மாகாணத்தில் பயணித்த ரயில் மீது அதிவேக புல்லட் ரயில் ஒன்று ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் 32 பர் பலியாயினர்.200 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.




கிழக்கு சீனாவின் பகுதியான ஷிஜியாங்மாகாணத்தை சேர்ந்த வென்ஸ் ஹோவ் -சுவாங்யூ பகுதியில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ரயிலின் பின்னால் வந்து கொண்டிருந்த புல்லட் ரயில் ஒன்று வந்த வேகத்தில் மோதியது.




 இவ்விபத்தில் புல்லட் ரயிலின் இரண்டு பெட்டிகள் உருக்குலைந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்தன.




 இந்த பெட்டிகளில் பயணம் செய்தவர்களில் சுமார் 32 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என ஷிஜியாங் மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.





மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன. புல்லட் ரயிலின் ஓடு தளத்தில் ஏற்பட்ட மாற்றம் இவ் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை