கிழக்கு சீனாவின் பகுதியான ஷிஜியாங்மாகாணத்தை சேர்ந்த வென்ஸ் ஹோவ் -சுவாங்யூ பகுதியில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ரயிலின் பின்னால் வந்து கொண்டிருந்த புல்லட் ரயில் ஒன்று வந்த வேகத்தில் மோதியது.
இந்த பெட்டிகளில் பயணம் செய்தவர்களில் சுமார் 32 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என ஷிஜியாங் மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன. புல்லட் ரயிலின் ஓடு தளத்தில் ஏற்பட்ட மாற்றம் இவ் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
No comments:
Post a Comment