Tuesday, July 5, 2011

யாழ்ப்பாணப் பூலான்தேவியின் நூதன பேஸ்புக் கொள்ளை...!!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது தலைநகர் கொழும்பில் வசித்துவரும் பிரஸ்தாப 25 வயது பெண் தர்ஷனா கொள்ளையடித்திருப்பது ஆயிரமோ இலட்சமோ இல்லை...!!! சுமார் 14 மில்லியன் இலங்கை ரூபாய்கள். இந்திய மதிப்பில் சுமார் 57 இலட்ச ரூபாய்கள். கத்தி இன்றி ரத்தம் இன்றி நூதனக் கொள்ளை. முடியுமா நம்மால்...???



பேஸ்புக்கில் பல வகையான பெயர்களில் நடமாடிய இவர் கிறங்கடிக்கும் வகையில் கிளு கிளுப்பாகப் பேசக்கூடியவர். கவர்ச்சி காட்டியும் கவர்ச்சிக்கு மயங்காத நபர்களை தான் அனாதை என்றும், சவர அலகால் தனது கைகளை வெட்டிக்காட்டியும் அனுதாபம் மூலம் வளைத்துப்போட்டு பணம் கறந்துள்ளார்.


இவரின் வேட்டைக்கு பலியானவர்கள் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த யாழ்ப்பாண இளைஞர்கள்.

யுத்த வடுக்களை சுமந்து ஒருவேளை உணவுக்காக வாடிநிற்கும் உறவுகள் மண்ணில் இருக்கையில் அவர்களை விட்டுவிட்டு பேஸ்புக்கில் பவ்வியமாய் காமரசம் பேசி உலாவந்த நயவஞ்சகிக்கு இவர்கள் உதவி புரிந்தது ஏன்???

கடன் பட்டு, தள்ளாத நிலையில் வீடு வளவு எல்லாம் அடவு வைத்து தகுதிக்கு மீறி செலவுசெய்து இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து இன்னமும் துயரில் வாடும் இவர்களின் பெற்றோரை ஓர் கணம் நினைத்திருந்தால் இவர்கள் நிச்சயம் ஏமாந்திருக்க மாட்டார்கள்

சிந்திக்கவேண்டும். இனியொரு புது யுகம் படைத்திடவேண்டும்...!!!


  

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை