Tuesday, June 28, 2011

விபச்சாரியுடன் எனது முதலிரவு அனுபவம் - 18+ மட்டும்













அந்த அழகிய விபச்சாரியுடனான எனது முதல் இரவு அனுபவத்தை என்றும் என்னால் மறக்க முடிவதில்லை. இது நடந்தது 2005 ம் ஆண்டு. O/L பரீட்சை (இந்தியாவின் 10ஆம் ஆண்டு) முடிவு வெளிவந்து A/L (+2) படிக்க தொடங்கிய காலம். எனது நண்பன், என்னிலும் இரண்டு வயது மூத்தவன் அவனுக்கு லன்டன் செல்வதற்கு வீசா வந்திருந்தது. அவனை அனுப்ப யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு நானும் அவனுடன் சென்றிருந்தேன். தனது வெளிநாட்டு பயணம் காரணமாக விருந்தொன்றை நண்பன் ஏற்பாடு செய்திருந்தான். அப்போதுதான் இந்த அனுபவம் கிட்டியது

'மச்சான், எப்பயாவது அடிச்சிருக்கிறியா?' என் அவன் கேட்டான். அவன் என்ன அர்த்தத்தில் கேட்கிறான் என்று புரியாவிட்டாலும் இல்லை என்பது போலவே தலையாட்டினேன். 'இன்டைக்கு பார்ட்டில அய்ட்டம் ஒன்னு ரெடி பண்ணியிருக்கிறன் அனுபவி மச்சான்' என்றான்.

அன்று இரவு ஓட்டல் அறையில் நான், அவன், அவனின் நண்பர்கள் என 5 பேர் கூடிவிட்டோம். A/C அறை சும்மா குளு...குளு னு இருந்தது. எதோ வெளிநாட்டு அய்ட்டமாம்.... சூப்பர் சரக்காம் என்று அவர்கள் தமக்குள்ளே கதைத்தது எனக்கு ஆர்வத்தை மிகவும் தூண்டியது.

சிறிது நேரத்தில் அறைக்கதவு தட்டுப்பட்டது. ஒருவன் ஓடிச்சென்று கதவைத் திறந்தான். இன்னோர் நண்பன் அவளை..... இல்லை அந்த தங்க நிற அழகியை அணைத்தபடி உள்ளே வந்தான்.

அப்போது தான் நண்பன் சொன்னதன் அர்த்தம் புரிந்தது. எனக்கு புது பழக்கம் வேறு... உடலில் எதேதோ மாற்றங்கள். அவளை மேலும் கீழும் பார்த்தேன்... 'கோகா கோலா பிறவுன் கலருடா' என்ற பாட்டைபோல கிறங்கவைக்கும் நிறம். மெல்ல அவளின் வாளிப்பான பகுதியில் கையை வைத்தேன். சும்மா Butter ஐ தொட்டது போல வழுக்கி சென்றது (கை).... 

அவளின் மணம் என்னை எதோ செய்தது.... எனக்காக 'முதலில நீ அடிடா' னு அவளை விட்டுத்தந்தார்கள்... உடனே இரு கைகளால் அவளைப்பிடித்து அவள் வாயோடு வாய் வைத்து அருகில் அவர்கள் இருப்பதையும் மறந்து அவளை சுவைக்க தொடங்கினேன்... உடலில் எதோ சுர் என என்னவோ செய்தது.... அந்த நிலையில் சிறித் சிறிதாக என்னை மறக்கத்தொடங்கினேன்.

என்னொருவன் அவளை என்னிடம் இருந்து பறிக்க தொடங்கினான்... 'மச்சான் காணும்டா... உனக்கு புதுப்பழக்கம்டா... ' கண்கள் மங்கிய நிலையில் 'கால் வாசி தானேடா குடிச்சிருக்கிறன், என்னும் கொங்சம் குடிச்சிட்டு தாரன்டானு அரட்டத்தொடங்கினேன்...

முதல் பழக்கத்திலேயே விஸ்கியை கால் போத்தல் குடிப்பதுனா சும்மாவா... மற்றவர் மகிழ்வுக்காக தன்னை இழந்து.... சமயத்தில் நோய்களை தருபவள் தானே விபச்சாரி.... இவ் வகையில் விஸ்கி கூட விபச்சாரி தானே...!!!


2 comments:

Ashwin-WIN said...

நல்லாருக்கு...

admin said...

இந்த கட்டுரைக்கு குரு நீங்க தானே அஷ்வின்!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை