Friday, June 24, 2011

யாழ்ப்பாணத்தில் விஜய் இன் பிறந்தநாள் கொண்டாட்டம்

யாழ்பாணப் பகுதியில் கணிசமான இளைஞர்கள் விஜய் ரசிகர்களே. கல்வியை மையமாகக் கொண்டு வாழ்ந்த யாழ் மக்களின் கலாச்சாரம் தற்பொழுது தடம் புரண்டு வேறுதிசைக்கு செல்லத் தொடங்கிவிட்டது. வெளிநாட்டு மோகம் இளைஞர்களை வேலை வெட்டி இல்லாத கட்டாக்காலிகல் ஆக்கியுள்ளது. தற்பொழுது ஓர் நடிகருக்கு பிறந்ததினம் கொண்டாடும் அளவுக்கு வந்துவிட்டது.

குறித்த இளைஞர்களுக்கு விவேகானந்தரின் பிறந்ததினம் தெரியாது.... தந்தை செல்வாவின் பிறந்த தினம் தெரியாது.........ஏன் தமது பெற்றோரின் பிறந்த தினம் தெரியுமா என்பதே சந்தேகம் தான். காலிடவில் பல்சருடன் ஊர்சுற்றும் இளைஞர்களின் சமூகத்தொண்டுதான் இந்த பிறந்ததின விழா ஒழுங்கமைப்பு.


மின்கம்பங்களில் விஜய் இன் திருஉருவ படம் மாட்டி, செவ்வரத்தம் பூ சாத்தி, தேங்காய் உடைத்து விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

இந்தியாவில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் சமூகத்தொண்டுகள் சில நடைபெற்றதாக அறிகிறேன். அவ்வாறு இவர்கள் செய்திருந்தால் பாராட்டியிருக்கலாம். ஆனால் இவர்கள் செய்தது வெட்டி வேலை தானே...

2 comments:

SShathiesh-சதீஷ். said...

வெட்டி வேலை

admin said...

நன்றி சதீஷ்

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை