ஒருவன் வாழ்வில் அவன் நல்லவன் ஆவதிலும் அல்லது கெட்டு சீரழிவதிலும் அவன் நண்பர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
2005 என நினைக்கிறேன், அப்போது நான் A/L படிக்கத் தொடங்கிய காலம். விஞ்ஞான பிரிவு மாணவர்களில் யாழ்ப்பாணத்தில் சயன்ஸ் கோல் போகாதவர்கள் அரிது. சயன்ஸ் கோலில் தான் அந்த பண்னி எனக்கு அறிமுகமானான்.
கெட்ட பழக்கங்களே அவனை கண்டு அஞ்சும் அளவுக்கு கெட்டவனாக இருந்தான். அந்த பன்னாடை மூலமே எனக்கு அவள் அறிமுகமானாள். புணரும் போது இன்பமாய் இருந்து வாழ்வில் பின்னர் பெரும் துயரம் அளிப்பது என்றால் அது அந்த விடயம் தான்.
அவன் அவளைப்பற்றி என்னிடம் அடிக்கடி கதைப்பான். அவள் கொஞ்சம் அதிகமான பணம் எதிர்பார்ப்பவளாக இருந்தாலும் அவளைப்போல் யாராலும் சுகம் தர முடியாது என்பான். அவன் சொல்ல சொல்ல அவளை எப்படியாவதுஅனுபவித்து விடவேண்டும் என்று துடித்தேன். ஓர் நாள் வெட்கத்தை விட்டு அவனிடம் கேட்டும் விட்டேன்.
'அதற்கென்ன மச்சான், ஏற்பாடு பண்ணிவிடுவம்' என்று சிம்பிலாய் பதில் அளித்தான். சொன்னதோடு மட்டுமல்லாமல் மறுநாள் கூட்டிக்கொண்டும் வந்துவிட்டான்.
சும்மா சொல்ல கூடாது. பேரழகி, குட்டையாக பிறவுன் கலரில் பாவடையும் வெள்ளை நிறத்தில் மெல்லிய டீசேர்ட் ம் அணிந்திருந்தாள். 'இந்தாடா' என்று அவளை என்னிடம் தள்ளிவிட்டான்.
வீதி ஓரமாய் அவன் திடீரென அவளை தள்ளிவிட்டதும் உண்மையில் நான் பயந்துவிட்டேன். யாராவது பார்த்தால் மானமே போய்விடுமே... என்னை ஒழுக்கமானவன் என்று நினைத்தவர்கள் இனி என்னவெல்லாம் நினைப்பார்கள்.... இவ்வாறு நொடியில் பல எண்னங்கள் தோன்றினாலும், இறுதியில் அவள் மீது கொண்ட மோகமே வெற்றி கொண்டது. என்னை சுதாரித்து 'மச்சான் எங்க வச்சடா செய்யிரது??' னு மெதுவாய் கேட்டேன். என் முகம் பாதி வெட்கத்திலும் மீதி பயத்திலும் சிவந்துவிட்டது.
அவன் ஒரு புதரை காட்டி 'அங்கபோய் மேட்டர முடிடா' னு சொன்னான். 'என்னடா... இங்கயா....??' னு அதிர்ச்சியாய் கேட்க, முதல் இப்பிடித்தான் இருக்கும். இந்த மேட்டருக்கு இதுபோல நல்ல இடம் கிடைக்காது மச்சி' னு என்றான்.
முதலில் பின்வாங்க நினைத்தாலும் பின்னர் மீண்டும் அவள் மீது கொண்ட மோகமே வென்றது. 'நீ மேட்டரை முடித்துவிட்டு call பண்னு னு சொல்லிட்டு அவன் எங்கயோ நகர்ந்துவிட, யாரும் பார்க்கிறார்களோ என அக்கம் பக்கம் பார்த்து அவளோடு புதருக்குள் புகுந்தேன். ஆள் அரவமற்ற புதர் எனக்கு ஓர் தைரியத்தை தந்தது.
கெலிச்சுப்போய் அவளை இழுத்து அவளின் பஞ்சுபோன்ற பகுதியில் வாயை வைத்தேன். ஆர்வக்கோலாறாய் அதிகமாக இழுத்துவிட்டேன் போல, அவளின் புகை என் மூச்சில் முட்டி இருமத்தொடங்கியது. கண்ணில் கண்ணீர் வரத்தொடங்கியது. உடனே அவளை தூக்கி வீசிவெட்டு வெளியே வந்தேன்.
Subscribe to:
Post Comments (Atom)
அதிகம் பார்க்கப்பட்டவை
-
Chelsea Charms எனும் பெண் உலகிலேயே பெரிய மார்பகங்கள் உடையவர் என்ற பெருமையை பெற தயாராகி வருகிறார். பெரிய மார்பகங்களுக்கான கின்னஸ் சாதனையை ந...
-
இலங்கையில் தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகளுக்கு பேஸ் ப...
-
பெண்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை அனுமதிக்க வேண்டுமெனக் கூறி சீனாவை சேர்ந்த அயா யுன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள...
-
நாஜி படை வீரர்களுக்கு செக்ஸ் பொம்மைகளை வழங்க ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் ரகசியமாக உத்தரவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.
-
ரஷியாவின் Meshchovsk நகரில் சிகை அலங்கார நிலையம் வைத்திருந்தவர் தான் இந்த 28 வயதாகும் ஆல்ஜா எனும் பெண். இவரது கடையில் திருடும் நோக்கோடு ...
-
2008 ம் ஆண்டு என நினைக்கிறேன், இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நேரம். சமாதான காலத்தில் திறக்கப்பட்ட வடக்கையும்...
-
அழகுக்கு பெயர் போன தாய்வானில் 2011 ற்கான மிஸ் தாய்வான் போட்டி 13 ஆகஸ்ரில் நடைபெற்றது. அதிலே கலந்து மக்களை கெலிப்படையச் செய்த அழகிகளின் படங...
No comments:
Post a Comment