Thursday, July 7, 2011

யாழ் பூலான் தேவியின் பேஸ்புக் கொள்ளை பற்றிய III ம் இணைப்பு

பேஸ்புக் மூலம் சபலத்தனம் மிக்க பல ஆண்களுடன் தொடர்பு கொண்டு பல இலட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணான கந்தையா தர்ஷனா தொடர்பான செய்தி எனது தளத்தில் 

யாழ்ப்பாணப் பூலான்தேவியின் நூதன பேஸ்புக் கொள்ளை...!!! ,  பேஸ்புக் மூலம் கொள்ளையடித்த யாழ் பூலான்தேவி - பாகம் II என இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. அது தொடர்பான ஆதாரங்கள் சில இப் பதிவு மூலம் வெளியிடப்படவுள்ளது.

01.07.2011 இல் பிரஸ்தாப யுவதியால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரால் வெளியிடப்பட்ட கடித்தம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.




ஆனால் இது பற்றி தர்ஷனா தரப்பு தெரிவிக்கையில்...

தனக்கு நான்கு வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும், அதில் ஒரு வங்கிக் கணக்கில் மாத்திரமே ஐம்பது இலட்சம் ரூபாய் வரை பரிமாறப்பட்டதாகவும், வங்கி தவிர வெஸ்டர்ன் யூனியன், மணிகிராம் மூலமும் பணம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் ஒரு வங்கிக் கணக்கைத் தவிர மீதி மூன்று வங்கிக் கணக்குகள் பற்றிய விபரங்களை வெளியிடவில்லை.


அதேவேளை, பணம் அனுப்பியது எல்லாம் சுவிசிலிருந்த தனது அண்ணனே என்றும் தெரிவித்துள்ளார். எமது ஊடகத்துடன் தொடர்பு கொண்டு பேசும் போது கூட முன்னுக்குப் பின் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில் வெளிநாடுகளிலிருந்து பேஸ்புக்கைப் பயன்படுத்தி அதன் மூலமாக பணம் கொடுத்து ஏமாந்த நபர்களை நாம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முன்வரவில்லை. போரினால் பாதிக்கப்பட்டு கஞ்சிக்கும் வழியில்லாமல் நிர்க்கதியாகவுள்ள எமது உறவுகள் குறித்து கவலை இல்லாமல் ஒரு பெண்ணுக்காக இலட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டியவர்களை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை